என் காதலியே!
இப்போது எப்படி
நீ
உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்?
எனக்கென என்று நீ
தந்துவிட்டுப்போன இதயம்
என்னிடம் இருக்கிறது
நீயோ....பொரினில்
உன் பணக்காரக் கணவனோடு
பந்தாவாக வாழ்கிறாய்
இருப்பினும்
உன் இதயம் என்னிடம்
பத்திரமாக இருக்கிறது
என் உண்மைக் காதலின் சாட்சியாய்...