திங்கள், 30 ஏப்ரல், 2012

துயர் சுமக்கும் உப்புமாவெளி மக்களின் கதை

வளமாக செழித்துக் கிடந்த தேசம் இப்போது வரண்ட பாலைவனமாய் காட்சியளிக்கின்றது. அபிவிருத்தி என்னும் வசந்தம் எப்போது இப்பிர தேசத்தை நோக்கி வீசும் என்று எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. எருக்கலையும் நாகதாளிச் செடி களுமாய் சுடுகாட்டின் சாயலில் தெரிகின்ற மண்ணில் உருக்கு லைந்த கட்டடங்கள் காட்சியளிக் கின்றன. பனை ஓலைகளினாலும் சிறு தடிகளினாலும் அடைக்கப்பட்ட வேலி களின் நடுவே தறப்பாள் மற்றும் ஓலைகளில் வேயப்பட்ட சிறு குடிசைகள் காணப்படுகின்றன. ஆடம்பரமோ அடிப்படை வசதிகளோ எமுதுவுமே இல்லாத நிலையில் கடலிலே அன்றாடம் உழைக்கும் வருமானத்தைக் கொண்டு அன்றைய பொழுதைக் கழிக்கின்ற சமூகமாக வறுமைக்கு வாக்கப்பட்டு போய் சிதைந்துகொண்டிருக்கிறது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உப்புமாவெளி என்னும் கிராமம்.


சுனாமி என்கின்ற அரக்கனால் துரத்தப் பட்ட இந்த உப்புமாவெளி பிரதேச மக் கள் 2006 ஆம் ஆண்டுதான் இந்தப் பிர தேசத்திற்கு வந்து குடியேறினார்கள். தொண்டு நிறுவனமொன்று இம் மக்க ளுக்குரிய வீட்டுத் திட்டங்களையும் கிராமத்தின் ஏனைய பொதுத் தேவை களையும் பூர்த்தி செய்து கொடுப்பதாய் வாக்களித்து ‘சுனாமி நலன்புரி முகாம்’ களில் வசித்த மக்களைத் தத்தெடுத்துக் கொண்டது. அதன் பின்னராவது தம் வாழ்க்கை கொஞ்சமேனும் ஏற்றம் பெறும் என எதிர்பார்ப்போடு வாழத் தொடங்கினார்கள் இப்பிரதேசத்து மக்கள். எத்த னையோ கனவுகளோடு வாழ முற்பட்ட இம்மக்களது வாழ்க்கை அந்த தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டினால் சோர்ந்து போனது. வீடமைப்பு செயற்றிட்டம் ஆரம்பமாகி இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் உப்புமா வெளி பிரதேசத்திற்கு ஒரு வீதிகூட அமைக்கப்படவில்லை. ஒப்பந்தப்படி வீதி, பொதுக்கிணறு, பாடசாலை என ஒரு கிராமத்திற்குத் தேவையான அத்தனை வளங்களும் ஏற்படுத்தித் தரப்படும் என்று சொன்ன நிறுவனம் இடைநடுவில் காணாமல் போனது. இந்த இரண்டு வருட இடைவெளியில் 87 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்துக்கு 50 வீடுகளை மாத்திரம் கையளித்துவிட்டு தமது கடமை முடிந்ததாய் நிறுவனம் விடைபெற்றது. ஏக்கத்தோடும் எதிர்பார்ப் போடும் காத்திருந்த மக்கள் விழிநீர் சிந்த விடைதேடி அரசாங்க அதிபர் காரியாலயம் நோக்கி நடந்தார்கள். நாட்கள்தான் நகர்ந்தனவே தவிர நடக்க வேண்டிய எதுவுமே நடக்கவில்லை. எங்கெல்லாமோ மடல் வரைந்தார்கள். எத்தனையோ பேரிடம் மன்றாடினார்கள். எதுவுமே தேவையில்லை. வீட்டைக் கட்டித் தாருங்கள் என்பதுதான் இந்த வறிய மக்களின் விண்ணப்பமாக இருந் தது. எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஒலித்தது. செவி கொடுத்து செயற்படுத்த எந்த அரச பணியாளரும் தயாராக இல்லை. கிராம சேவகர் கூட தன் வேலையிலேயே கவனமாக இருந்தார். இப்படியாய் அவலத்தைச் சுமந்தபடி நகர்ந்து கொண்டிருந்த இந்த உப்புமாவெளி கிராம மக்க ளுக்கு அடுத்ததாய் வந்து சேர்ந்தது போர் எனும் துன்பம். அதிலும் துரத்தப்பட்டு இருக்க இடமில்லா மல் எல்லாவற்றையும் இழந்து அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டு மீண்டும் மீள்குடியேற்றம் என்ற பெயரோடு ஊர் திரும்பினார்கள்.


வன்னியே சிதைக்கப்பட்டுதானே கிடந்தது. உப்புமாவெளி மட்டும் விதி விலக்கா என்ன? மீண்டும் சிறிது சிறிதாக வாழ்வில் அரும்பத் தொடங்கி னார்கள். இழப்புகளை சிறிது சிறிதாக மறந்த இம்மக்கள் இயல்பு வாழ்க்கைக் குத் திரும்பினார்கள். ஊரைவிட்டு ஓடும்போது இம்மக்களுக்கு தம் உயிரை விட வேறொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. வீட்டு தளபாடங்கள் எல்லாம் சிதைந்தது போக சில எஞ்சின. அவையும் களவாடப்பட்டன. திரும்பி வந்த மக்கள் நிலைமையைப் பார்த்து பதறித்தான் போனார்கள். காவலரண்கள் எல்லாம் இம்மக்களுடைய கதவு, ஜன்னல் மற்றும் ஓடுகளினால்தான் போடப் பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மனதுக்குள்ளேயே புழுங்கிய வாறு ஊமையானார்கள். யுத்தத்தில் சிதைந்த மக்களது பிரதேசங்களை சில தொண்டு நிறுவனங்கள் பொறுப்பெடுத்து சேவை செய்தன. ஆனால் இந்த உப்புமாவெளியை மட்டும் வந்து பார்த்துவிட்டு போனார்கள். போனவர்கள் திரும்பி வரவேயில்லை.


யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் தீர்ந்து விட்டன. இன்னும் இம்மக்களது அடிப்படை வசதிகள்தானும் செய்து கொடுக் கப்படவில்லை. மின்சார வசதியில்லை, வீதி, பாடசாலை, போக்குவரத்து, கிணறு, சுகாதார நிலையம் அல்லது வைத்தியசாலை என இவை எதுவுமே இல்லாத நிலையில் இக்கிராமம் இன்னும் இருக்கின்றது. இக்கிராமத்துப் பிள்ளைகள் அடுத்த ஊரிலுள்ள பாடசாலைக்கு அதுவும் நடந்துதான் செல் கின்றனர். போக்குவரத்து வசதியில்லாத ஒரே காரணத்தால் அண்மையில் மூன்று அப்பாவி உயிர்கள் அநியாயமாக பறிபோய்விட்டன. பாம்புக்கடிக்கு இலக்கான மூவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாது போனமை யால் இவ் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. போக்குவரத்து வசதி மட்டும் இருந் திருந்தால் அம்மூன்று உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். வீதிகள் எல்லாம் மணல் மேடுகளாய் காட்சியளிக்கும் நிலையில் எப்படி போக்குவரத்து இடம்பெறும்?


சாதாரண நிலையில் உள்ள இந்த மக்களால் இனியும் எங்கும் அலைய முடியாது. அதனால் யாராவது வந்து உதவிசெய்வார்களா என காத்திருக்க மட்டுமே முடிகின்றது. இது தொடர்பாக இப்பிரதேச கிராம சங்கத் தலைவர் ‘நாங்களும் போகாத இடமில்லை. பேசிப்பார்க்காத ஆட்களில்லை. எல்லோரு மே விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் பதில் கிடைப்பதாகவோ அல்லது மாற்றம் வருவதாகவோ இல்லை’ என் கிறார்.


யுத்தத்துக்குள் சிக்கிய வீடுகள்


மீனவர் சங்கத் தலைவரான ஜோன் மென்கோ ‘இந்த இடத்திற் கு இந்த மக்கள் மீள்குடியேற்றப் பட்ட காலத்திலிருந்து எந்தவித மான வேலைத்திட்டங்களோ உத விகளோ இதுவரை பூரணமாக கிடைக்கவில்லை. உரியவர்களிடமும் பொறுப்பானவர்களிடமும் போதுமான அளவுக்கு பேசி விட்டோம். எதுவுமே சாத்தியமாகவில்லை. இதை தீர்க்கும் வழி இனி எங்களுக் குத் தெரியவில்லை’ என்று கவலையோடு தெரிவித்தார். எங்களுக்கு எதுவுமே தேவையில்லை. மழைக்காலத்தில் பிரச்சினை இல்லாமல் இருக்க ஒரு வீடும் போக்குவரத்துக்காக ஒரு பாதையும் தான் வேண்டும். வேறு எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம் என்று உருக்கமாக கேட்கின்றனர் இம்மக்கள்.


துயர்சுமந்து வாழும் இந்த உப்புமாவெளி மக்களின் வேதனை குரலுக்கு இனியாவது யாராவது செவிசாய்ப்பார்களா?

இட நெருக்கடியால் பூரண தபால்சேவை வழங்க முடியாத அளம்பில் உப தபால்கந்தோர்

முல்லைத்தீவில் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட அளம்பில் பிரதேசத்திலுள்ள தபால்நிலைய சேவைகள் சரிவர நடைபெறவில்லையெனவும் பொறுப்புனர்வில்லாமல்  அங்கு பணியாற்றும் ஊழியர்கள் செயற்படுவதாகவும்  அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இந்தப் பிரச்சினை தொடர்பாக மேலும் மக்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு ,
 அளம்பில் உப தபால் கந்தோரில்,   தபால்  சேவைகள் சீராக நடைபெறுவதில்லை. அங்கு எமக்கு கடிதங்கள் வந்தாலும் உரியவர்களிடம் கொண்டுவந்து தரப்படுவதில்லை. காண்கின்ற யாரிடமாவது தபால்காரர்கள் கடிதங்களை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால், எமக்குரிய கடிதங்கள் மற்றும் இதர தபாலில் வரும் பொதிகள் என்பன கொடுக்கப்படுகின்றவர்களின் கவனயீனத்தால் சரியாக எம்மிடம் வந்து சேர்வதில்லை. . அவ்வாறு பல நாட்களின் பின்பு வந்து சேர்ந்தாலும், கடிதங்கள் பிரிக்கப்பட்டு கிழிந்த நிலையில் தான் கிடைக்கும். எத்தனையோ முக்கியமான கடிதங்கள் எங்களுக்கு இவ்வாறுதான் கிடைத்தும் சில கிடைக்காமலே போயுமுள்ளன. நாங்களும் பலதடவைகள் இது தொடர்பாக அளம்பில் தபாலதிபரிடம் முறையிட்டும் தெரியப் படுத்தியும் இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இனி நாங்கள் அரசாங்க அதிபரிடம் மனுவொன்றைக் கொடுக்கவே உத்தேசித்துள்ளோம். இவ்வாறு மக்கள் குறிப்பிட்ட நிலையில்,
       இவ்விடயம் தொடர்பாக அளம்பில் தபாலதிபரை தொடர்புகொண்டு கேட்டோம்.
மக்களால் தெரிவிக்கப் படுகின்ற இந்த விடயம் சம்மந்தமாக,  குறித்த மக்கள் என்னிடம் தெரிவித்த பின்பு  நானும் எங்களோடு சேவையில் ஈடுபடுகின்ற தபால் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினேன். இப்போது இவ்வாறான பிரச்சினைகள் வரவில்லை. எத்தனையோ குறைபாடுகளோடு தான் அளம்பில் தபால் கந்தோர் இயங்கி வருகிறது. தனியார் ஒருவரின் வீட்டின் ஒரு அறையில்தான் இப்போது எமது தபால் நிலையம் இயங்கி வருகிறது. அத்தோடு, எமக்கு போதியளவு வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. நிரந்தரக் கட்டிடத்துக்கான இடவசதி கூட இதுவரை எம்மால் பலதடவைகள் பரிந்துரைக்கப் படும் கிடைப்பதாகவோ அல்லது ஒதுக்கித் தருவதாகவோ தெரியவில்லை. இப்போது இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ள அளம்பில் சந்தியிலுள்ள காணியில் தான் இடம் ஒதுக்கித் தருவதாக கூறப்பட்டாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நான் ந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு தபாலதிபரோடு தொடர்ந்து பேசி வருகிறேன். விரைவில் இடம் கிடைக்கும்.
எம்மக்கள் இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். இட நெருக்கடி மற்றும் வலப் பற்றாக்குரைகளோடு இயங்கும் எமது தபால் நிலையத்தி இப்போது மூன்று ஊழியர்கள்தான் பணியாற்றுகிறார்கள். சில தவறுகள் நிகழ்ந்தாலும், அதனையே சுட்டிக் காட்டி குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். எமது பிரதேசத்தினை வளர்ப்பதற்கு நாங்கள் கண்டிப்பாய் ஆவன செய்வோம். இனிமேலும் இப்படியான தவறுகள் மக்களுக்கு நிகழாது என்பதை உறுதியாய் சொல்லிக் கொள்கிறேன். ஏதாவது உங்களுக்கு வந்த கடிதங்களில் பிரச்சினை நடந்தால் எனக்கு உடனடியாக தெரியப் படுத்துங்கள் என்றார்.
வலக் குறைபாட்டோடும் இட நெருக்கடியோடும் இத் தபாலகம் இயங்கினாலும் மக்களுக்குரிய சேவைகளை சரிவர செய்ய வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு அரசாங்க நிலையங்களுக்கும் உண்டு என்பதோடு, சில விடயங்களில்  மக்களும் புரிந்துணர்வோடு செயட்படவேண்டியவர்கள் என்பதை மறுக்க  முடியாது.
இனியேனும் குறித்த அளம்பில் உப தபால் நிலையம் நிரந்தர கட்டிடத்தோடு வசதி வாய்ப்புக்களைப் பெற்று சீரான  சேவையை மக்களுக்கு வழங்குமா? 


அலம்பில் ஊடகன்
 

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

ஊடகவியாலாளர் சிவராமின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் ..


ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் ...இன்னும் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது.
ஒரு தமிழ் தேசியப் பற்றாளராக தமது ஊடக ஆரம்பத்தை சிங்களப் பத்திரிக்கையான தி ஐலன்ட் இல் தான் தராகி என்னும் பனை பெயரைத் தாங்கியபடி பத்தி எழுத்தாளராக ஆரம்பித்தார். தமிழ் மக்களின் வாழ்வியலை சிங்கள மக்களும் புரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கோடு தான் இவரது படைப்புக்கள் வெளியாகின. தமது வாதத்தையும், மக்களின் உண்மையான வாழ்வியலையும் வெளியுலகுக்கு தெரியப் படுத்துவதற்கு பல பிற மொழி ஊடவியலாலர்களோடு தர்க்கித்தார். இருப்பினும், தொழில் ரீதியான நட்புறவை இவர் ஒருபோதும் சிதைத்துக் கொள்ளவில்லை. தமது உயிருக்கு இப்படியான ஊடகப் பயணம் உலைவைக்கும் எனத் தெரிந்திருந்து, தன்னம்பிக்கையோடு பேனாவினால் போராடிய சிவராமின் உயிரை இறுதியில் நாசகாரிகள் april 28அன்று
பறித்தே விட்டனர்.
சிவராம் பறிக்கப் பட்டாலும், சிவராமின் எழுத்துக்கள் இன்றும் உயிர்வாழும் நிலையில், இவருடைய ஊடகப் பயணத்தில் எழுதப்பட்ட தடங்கள் என்றுமே தமிழ் உலகை விட்டு நீங்காது.

இலங்கையில் ஊடக சுதந்திரம்

இலங்கையில் வருகின்ற மே மாதம் 3 ஆம் திகதி ஊடக சுதந்திர நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில்,  இங்கே  ஊடக சுதந்திரம் இதுவரை எவ்வாறு பேணப்பட்டுள்ளது  என்ற பதிவு ......

இலங்கையில் ஆகக் குறைந்தது 35 வரையான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஊடகவியலாளர்கள் கடத்தப் பட்டுள்ளனர். ஐந்து ஊடக நிறுவனங்கள் எரியூட்டப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர், தாக்கப் பட்டுள்ளனர், அச்சுறுத்தப் பட்டுள்ளனர், எச்சரிக்கப் பட்டுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டுள்ளது.

வியாழன், 26 ஏப்ரல், 2012

முதன் முதலாய்....

அன்பர்களுக்கு... நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் குறும்படம் ஒன்றில் கிளிக்கிய சிறு காட்சி..

புதன், 25 ஏப்ரல், 2012

எனக்குப் பிடித்த நான்....

எனக்குப் பிடித்தவர்கள் கலைத்துறையில் ......

பாடகர் உன்னிகிருஷ்ணன்
 மென்மையான பாடல்களாலும் பக்திப் பாடல்களாலும் யாரும் தொட முடியாத இடத்திலிருக்கும் பாடகர் உன்னிக்கிருஷ்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவரது "நறுமுகையே... நறுமுகையே'' பாடல் என்னைக் கவர்ந்த பாடலாகும். 
அனுராதா ஸ்ரீராம் 


எவருக்கும் கிடைக்காத அறிய குரல்வளம் அனுராதாவுடையது என்றால் இது மிகையல்ல!  அடிக்கடி குரல் மாற்றிப் பாடும் இவரது அசாத்திய திறமை எளிதில் யாருக்கும் வந்து விடாது.  












பாடகி சித்ரா



பிறப்புசூலை 27, 1963(அகவை 48)
திருவனந்தபுரம்,கேரளா, இந்தியா
இசை வகை(கள்)பாடகி,கருநாடக இசை
தொழில்(கள்)பாடகி 
இசைக்கருவிகள்பாடல்
இசைத்துறையில்1982–present
இளம் இசையமைப்பாளர் அனிருத் 
எனக்குப் பிடித்த அனிருத்! இளம் வயதில் எத்தனை பக்க பலம் இருந்தாலும் திறமை  இல்லாமல் உழைப்பு இல்லாமல் பிரகாசிக்கவோ வெற்றியடையவோ முடியாது. இருப்பினும், அனிருத்தின் வெற்றி இப்போதுள்ள இளம் முயற்சியாளர்களுக்கு  ஒரு வழிகாட்டல் தான்...
உலகின் சந்து, பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலி(ளி)த்து கொண்டிருக்கும் ஒரு பாடல் என்றால், அது கொலவெறி தான். முதல் படத்திலேயே, அதுவும் படம் வெளிவருவதற்கு முன்பே ஒரே பாட்டிலேயே உலகம் முழுவதையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர் கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத். பலர் இப்பாட்டை வரவேற்ற ‌போதிலும், சிலர் இந்தபாட்டை எதிர்த்தும் வருகின்றனர். 
இந்நிலையில் தினமலர் இணையதளத்திற்கு அனிருத் அளித்த பிரத்யேக பேட்டியில், கொலவெறி பாட்டை இவ்வளவு பெரிய ஹிட்டாக்கிய ரசிகர்களுக்கு நன்‌றி என்றும், தொடர்ந்து நல்ல நல்ல பாட்டுகள் கொடுக்க தான் முயற்சி பண்ணுவதாகவும் தெரிவித்தார். மேலும் இப்பாட்டு தொடர்பான எந்த விதமான கேள்விக்கும் தான் பதிலளிக்க தயாராக இருப்பதாக அனிருத் கூறியுள்ளார்
அனிருத்! வாழ்த்துக்கள்.... இன்னும் பெருகட்டும் உங்கள் சாதனைகளின்  நீட்சிகள்....

கிழிக்கப்பட்ட முகமூடியானாய்...


இரகசியங்கள் அதிகமாய் 
பேசிக்கொண்டோம்....
அப்போது புரியவில்லை எனக்கு 
நம் காதலும் இப்படி
இரகசியமாயே போய்விடும் என்று!! 

யாருக்கும் தெரியாமல் 
நமக்குள்ளே புதைக்கப்பட்ட காதல்
உன்னை பாதுக்காத்துக் கொள்ளும்
போர்வையாகிப் போனது...

எனக்குத் தானே...
மனதைக் கொன்று
உயிரைத் தின்னும் 
சாவுக்கான அழைப்பிதலாய் 
மாறி விட்டது....

மன்னித்துக் கொள்
உன்னைக் காதலித்து 
உன் நேரங்களை களவாடியதர்க்கு!!

உன் வாழ்க்கைக்கு என்னை 
பாவித்துக் கொண்டாய்....
நான்தான் 
புரியாமல்....
மௌனித்துப் போனேன் 
உன் அன்பின் நிறைவினால் ...

இனியும் ...
வாழ மாட்டேன் உனக்காக
மாறப் பார்க்கிறேன் 
உன்னை மறக்குமளவுக்கு...
இல்லையேல்...
மரணத்தை மணந்து கொள்கிறேன் நிம்மதியாய்....

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

கேம் ஓவர்- GAME OVER



இலங்கை ஊடகவியல் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் நடராஜா மணிவாணனின் திரைக்கதை,இயக்கத்தில் ஆனந்த,சுபோதா ஆகியோரை கதைக்குரிய நாயகர்களாகக் கொண்டு  கேம் ஓவர் எனும் குறும்படம் இம்மாதம் 5 ம் திகதி ஊடகவியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.
ஒரு பெண் நினைத்தால் எதுவும் செய்வாள்... அது எந்தத் துறை என்றாலும் முடியும் என்பதை தத்ரூபமாகக் காட்டும் குறும்படம் தான் இந்த கேம் ஓவர் !
           தன்னுடைய குழுவிலிருந்து வழிதவறிய பெண் போராளி ஒருத்தி நடுக்காட்டில் தனித்துப் போகிறாள். போதாததுக்கு கை கால்களில் காயம் வேறு! எவ்வாறு இவள் தப்பிக்கப் போகிறாள் இந்த நடுக்காட்டிலிருந்து என படத்தைப் பார்க்கும் விழிகள் ஆச்சர்யமாய் விரிகின்றன. ஏனெனில், அக்காடு பயங்கரமான ஆளரவமற்ற அடர்ந்த வனம். அதுவும் எதிரிகள் உலாவும் காடு. உடல் சோர்ந்து போக புல்தரைக்குள் தன்னுடலை மறைத்து பற்றைகளோடு பற்றையாய் பதுங்கிக் கிடக்கிறாள். அந்நேரம் .... எதிரணி வீரனொருவன் வந்து இவளைக் கண்டு விடுகிறான். இனிமேல் அவள் பாடு அதோ கதிதான் என பார்ப்பவர்கள் கணக்குப் போட, அங்கு நடப்பதோ வேறு! அவள் அவனிடம் சிக்கிநாலா அல்லது அவன் என்ன செய்தான்... அவள் முடுவு என்ன என எதிர்பாரா திருப்பங்களோடு புதிர்போடும் குறுங் காவியம் தான் கேம் ஓவர்!
     இயற்கை கொஞ்சும் அடர்ந்த காட்டுப் பகுதியில் குளுமை பறந்து கிடக்கும் காட்சியமைப்பு மிகவும் அருமை. அத்தோடு குறைந்த  வளத்தை பயன்படுத்தினாலும் நல்ல கதையும் அதற்க்கு ஏற்ப நகரும் இசையும் படத்திற்கு வலுச் சேர்க்கின்றன.
இயக்குனர் நடராஜா மணிவாணனுக்கு  இது மூன்றாவது படைப்பு அவதாரம்.  இந்த குறும்படத்தினைப் பார்க்கின்றபோது அவருடைய முயற்சியும் ஆளுமையும் நன்றாகவே தெரிகிறது. எனவே, இலங்கை சினிமா உலகில் ஒரு நல்ல இயக்குன நமக்குக் கிடைத்திருக்கிறார் என்பதோடு இனியாவது இலங்கை
தமிழ் சினிமா சிறந்த இடத்தை அடையும் என்று நம்பிக்கை கூற முடிகின்றது.
இயக்கம்- நடராஜா மணிவாணன்
நடிப்பு      - ஆனந்த,சுபோதா
உதவி      - ராகுல், சரிக், துஷான்

வியாழன், 19 ஏப்ரல், 2012

நேரடி ரிப்போட் அடிப்படை வசதியின்றி அவதியுறும் கொக்கிளாய் மக்கள்...

முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடாக அமைந்துள்ள இயற்க்கை வளம் கொட்டிக்கிடக்கும் பிரதேசங்கள் தான் இந்த முகத்துவாரம் தொடங்கி நாயாறு வரையான பகுதிகள். 1982 களில் போரின்  தாக்கத்தினாலும் வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டு  தமது வளமான மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள் இந்த கொக்கிளாய் மற்றும் கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள். கால்நடை வளர்ப்பு, சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் வேளாண்மை என இவர்களுடைய வாழ்வாதாரத் தொழில்களின் மூலம் தன்னிறைவானதொரு  பொருளாதார நிமிர்வை இம்மக்கள் எட்டிப் பிடித்திருந்தார்கள் என்பது யாவரும் அறிந்த நிதர்சனமான உண்மை. இவ்வாறு வாழ்ந்த மக்கள் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாகத் தொடங்க இடம்பெயரத்தொடங்கினார்கள். செம்மலை, அளம்பில், பூதன்வயல், தண்ணிமுறிப்பு, முறிப்பு, தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி,முள்ளியவளை போன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அன்றிலிருந்து அகதி வாழ்க்கையை ஆரம்பித்த மக்கள், அடைந்த நெருக்கடிகள், துன்ப துயரங்கள் கொஞ்சமல்ல! வாழ்வாதாரத்தை நிவர்த்திக்கவே பெரும் திண்டாட்டம்தான். படிப்படியாக மீண்டும் அடைக்கலம்  புகுந்த பிரதேசங்களில் தமது தொழில்களை செய்யத்தொடங்கிய மக்கள், ஓரளவுக்கு வாழ்க்கையை சமாளிக்கத் தக்கவர்களானார்கள்.
       வன்னி மண்ணில் வளமானதொரு வாழ்க்கை கிடைத்திருந்தாலும், தம் சொந்த நிலத்துக்கு எப்போது மீள்வோம் எனும் நப்பாசையும் எதிர்பார்ப்பும் நாளுக்குநாள் இம்மக்களிடம் அதிகரித்துக் கிடந்தது. கொக்கிளாய் பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களான கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், கொக்குத்தொடுவாய் போன்ற பகுதி மக்களும் இடம்பெயர்ந்து வந்த பிற்ப்பாடு இவர்களுடைய வாழ்விடங்கள் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் போர் மூளும் சூனியப் பிரதேசமாக மாறிப்போனது. அடிக்கடி இப்பிரதேசங்களில் யுத்தம் நடந்தபடியினால் இந்த அப்பாவி மக்களின் வளங்கள்,சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிந்து போயின. இச் சந்தர்ப்பத்தில்தான் உக்கிரமான போர் இருதரப்பினருக்கும் ஆரம்பமாகி அனைத்து வன்னி மக்களும் மீண்டும் இடம்பெயர்ந்து அகதிகளாகி வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டு திரும்பவும் இரு வருடங்களின் பின்னர் சொந்த ஊர்களுக்கு ஒருசில பகுதியினர் மீள்குடியேற்றம் எனும் பெயரில் அனுப்பி வைக்கப் பட்டனர்.
                                   ஏராளமான உறவுகளை போருக்கு இரையாக்கிவிட்டு என்சியவர்களோடு மீண்டும் ஊருக்குப் போவோமா என இம்மக்களும் காத்திருந்தார்கள். இரண்டரை வருடங்களின் பின்புதான் அரசின் பார்வை இம்மக்களின் மீது விழுந்தது. பெரும் எதிர்பார்ப்புக்களோடு 30 வருடங்களின்  பின்னர்  தமதூர் திரும்பினார்கள். ஆனால், இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது கொடுமை.
    காணிகள் பற்றைக் காடுகளாகவும், பொதுச் சொத்துக்கள்  சிதைக்கப்பட்டும் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டும் கிடந்தன. இதைவிட பெருமளவான மக்களின் சொந்தக் காணிகள் இராணுவத்தினரின் முகாம்களாகி இருந்தன. இத்தனை மாற்றங்களோடு மீளக்குடியேறி ஒரு வருடகால இடைவெளியாகியும், இதுவரை பூரணமாக அடிப்படை வசதிகளைப் பெறவில்லை என்பதே வேதனையளிக்கும் விடயமாகும்.
ஊடகங்களில் இப்பிரதேசங்களில்தான் அபிவிருத்தி அதிகமாக நடைபெறுகின்றன என்று செய்திகள் பரப்பப்பட்டாலும் , நேரடியாக இங்கே வந்தபோதுதான் அப்பிரச்சாரங்கள் வெறும் கண்துடைப்பு என்பது புரிந்தது. மீளக்குடியேறி ஒரு வருடங்களாகியும் இதுவரை குடிதண்ணீர் வசதிகூட சரியாக பெற்றுத்தரப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஆனாலும் அரச தரப்பில் சொல்லப்படும் கருத்துக்கள் இத்தகைய பிரச்சினைகள் வெறும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் என்பதுபோல் கூறப்படிகின்றமை கவனிக்கத்தக்கது.
-இதுவரை தற்காலிகமாக தமக்கு வழங்கப்படும் வீடுகளே   பூரணமாக இன்னும் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்த கருத்துக்களை நாங்கள் அப்பகுதி அரச உத்தியோகத்தர் ஒருவரோடு தொடர்புகொண்டு கேட்டோம்.
            குறித்த கொக்கிளாய் மேற்கு  மற்றும் கொக்கிளாய் கிழக்கு ஆகிய பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டு கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், கொக்குத்தொடுவாய், புளியமுனை  போன்ற பிரதேசங்களில்  சுமார் 300  குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 100  சிங்கள குடும்பங்கள் முகத்துவாரம்,புளியமுனை  பகுதியில்  வாழ்கின்றனர். இவர்களில் தற்போது பெரும்பாலானவர்களுக்கு தற்காலிக வீடுகள் சோபா என்னும் நிறுவனத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவர்களுக்கும் இப்போது வீடுகள் கையளிப்பதர்க்குரிய வேலைகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் தேவைகளை நாமும் ஏராளமான நிறுவனங்களுக்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம். படிப்படியாகத்தானே இவைகளை பூரணமாகக முடியும்? உடனடியாக செய்து முடிக்கக் கூடியளவில் வசதி வாய்ப்புக்கள் இல்லை தானே? என்றவரிடம், மக்கள் முன்வைக்கும் இன்னொரு பிரச்சினையையும் குறிப்பிட்டோம்.
-இன்னும் குடிதண்ணீர் வசதி போதியளவுக்கு பெற்றுத்தரப்படவில்லையெனவும் மலசலகூடம், கல்வி வசதிகள் என்பன  குறையாகவே உள்ளதே என்றபோது...
   
குடிதண்ணீர் பிரச்சினை  என்பது இன்று நேற்றல்ல! காலம் காலமாக இருந்து வருகின்ற பிரச்சினைதான் இது. அனைத்து மக்களுக்கும் குடிதண்ணீர் வசதிகளை நாமும் முடிந்தளவில் செய்து கொடுத்துள்ளோம். குழாய்களின் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. இதனை இராணுவத்தினர் தற்போது செய்து வருகின்றார்கள். இன்னும் சிறிது காலத்தில் இப்பிரச்சினை முழுமையாக நிவர்த்திக்கப்பட்டுவிடும். அடுத்து கல்வி நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், 200  மாணவர்கள் இங்கே கொக்கிளாய் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்குரிய பாடங்களை நாங்கள் 18  ஆசிரியர்களை வைத்து நடத்துகின்றோம். பாடசாலையையும் மீள புனரமைப்பதற்கு சில வேலைப்பாடுகளை செய்துள்ளோம். (ஆனால் மக்கள் தரப்பில் 18 ஆசிரியர்கள் இருந்தாலும் இவர்களில் 8 ஆசிரியர்களே பாடசாலைக்கு சமூகமளிப்பதாகவும், ஏனையவர்கள் தமக்கு விரும்பிய நேரத்தில் வந்து போவதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. ) மலசல கூட வசதிகள் ஓரளவுக்கு அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள் வழங்க்கப்படாதவர்களுக்குத் தான் இன்னும் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அதுவும் விரைவில் பூர்த்தி செய்யப்படும். மக்கள் சொல்வதைப் போன்று இவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை நாங்கள் செய்து கொடுக்காமல் இல்லை. ஆனாலும், அவை படிப்படியாகத்தான் செய்யப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்  என்றார்.

இவருடைய கருத்துக்கள் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றபோது, மக்களால் பல குற்றச்சாட்டுக்கள்  அரசை நோக்கி எறியப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளிலுள்ள இருதரப்பு நிலைமைகளிலும் உள்ள நிஜத்தை கண்டறிய அப்பகுதியிலுள்ள மதத்தலைவர்   ஒருவரை நாடினோம். அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
                           முகத்துவாரம் பகுதியில் தற்போது வாழ்கின்ற சிங்கள மக்கள் தொழிலின் நிமித்தம் நீர்கொழும்பு, புத்தளம் போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு மின்சாரம், சுயதொழில் வாய்ப்புக்கான ஊக்குவிப்புக்கள்  என்பன வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதில் குறிப்பிடக் கூடியது யாதெனில், இந்த முகத்துவாரம் பகுதி 1980 களில் தமிழ் மக்களுக்கு உரித்துடைய  நிலங்களாக இருந்துள்ளன. இப்போது தொழிலுக்கு வந்த மக்கள் தம்மை இப்பகுதிக்குரிய நிரந்தரவாசிகளாக அரசாங்க செயலகத்தில் பதிவு செய்துள்ளனர். இப்போது இப்பகுதியில் தமிழ் மக்கள் யாரும் இல்லை. அத்தோடு கொக்கிளாய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் தமிழ்ர ஒருவரின் காணியை கட்டாயமாக்கி பௌத்த  பிக்கு ஒருவர் பிடித்து வைத்திருக்கிறார். அக்காணியில் அரசமரமொன்று நிற்பதே இதற்க்கு காரணம். இதற்கும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. காணிக்குரியவரும் எங்கும் சென்று முறைப்பாடு செய்யப்  பயந்து இப்பிரச்சினையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையிலுள்ளார். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் சுரண்டப்படுகின்றார்கள். எனவே, இனங்களுக்கிடையில்  பிரிவினையை ஏற்படுத்தாமல் இரு தரப்பு மக்களுக்கும் உரிய வசதி வாய்ப்புக்களை அரசாங்கம் ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்றார்.
   எல்லாத் தரப்பும் தாம் சார்ந்த நியாயங்களை வாதிட்டுக்கொண்டிக்கின்றனர். இதனால் பாதிக்கப் படுவதென்பது அப்பாவி மக்கள்தான். எனவே, கொக்கிளாய் சார்ந்த மக்களின் இந்த அடிப்படைப் பிரச்சினைகள் அரசினால் வெகுசீக்கிரம் பூர்த்தி செய்யப்படாமல் போகுமிடத்து, அங்குள்ள இரண்டு இன மக்களுக்குமிடையில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றக்கூடிய நிலை வரலாம் என்பதை அரசு கவனிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளமை புலனாகின்றது.

நிரந்தரத்தை வேண்டும் நீள்பெருமூச்சு..!!

பட்டுப் போயிருந்த மரங்கள்
பசுந் தளிர்களை பிரசவித்திருந்தன...
வெட்டை வெளிகளாய்
விதவைக்கோலம் பூண்டிருந்த எனதூர்
கொட்டில் குடிசைகள் என
கொஞ்சம் நிறைந்திருந்தது...
இயல்பை எங்கோ தொலைத்த
என்தேசத்து உறவுகளின் வாழ்தல்களில்
இப்போதெல்லாம் ஏதோவொரு
இருப்பைப் பற்றிப் பிடிப்பதற்கான
அறிகுறிகளின் ஆரம்பம்...
வெறுமை நிறைந்திருந்த வீதிகள்
எதோ உருப்படியாக்கப்படுகின்றது...
மின்மினிகளால்  தடம்பார்த்து நடந்த
என்தேசம் இன்றுகளில்
மின்சாரக் கம்பங்களைச் சுமந்திருந்தது...
வறுமைக் களவாணி
ஊரிலிருந்து விரட்டப்பட்டிருந்தான்...
கேள்விக்குறியாகிப் போயிருந்தவர்களின்
உயிர்களுக்கான உறுதிப்படுத்தல்கள்
சிறைக்கம்பிகளின் பின்னாலிருந்து
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது...
ஊருக்குப் பலதாய் உருவாக்கப்பட்டிருந்த
உடல்மேயும் சாவடிகள்
உருவமிழந்து ஒன்று இரண்டாகியிருந்தன...
அப்பாடா!!
இப்போதுதான் ஆனந்தமான பெருமூச்சு...
நெரிக்கப்பட்ட குரல்வளைகள் 
விடுவிக்கப்பட்டதான சுதந்திர உணர்வு...
உள்ளக்கிடக்கைக்குள் விண்ணப்பமொன்று...
''இறைவா!! இப்படியே தொடர வேண்டும்...''

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

இலங்கை ஊடக ஒழுக்கமும் அத்துமீறல்களும்....


,yq;if gj;jpupif Kiwg;ghl;L Mizf;FOthy; vy;yh Clfq;fSf;Fk; gj;jpupifahsu;fSf;Fk; nghUe;Jk; tifapy; eilKiwg;gLj;jg;gLk; xOf;ff;Nfhitnahd;W ,g;NghJk; eilKiwapYs;sJ. ,e;j rl;lf;Nfhit Clfq;fs; jd;dpr;irahf KbntLf;fhJ Clf ju;kj;Jld; nraw;glNtz;ba fl;lhaj;ij Vw;gLj;JtJld; Clfq;fisAk; gpw vjpu;g;GfsplkpUe;J ghJfhj;J ePjpahd Clfq;fshfTk; nraw;gl itf;fpd;wJ vdyhk;. ,e;j tifapy; Clfq;fs; xUehl;bd; mikjpiag; NgZtjpYk; vy;yh tplaq;isAk; kf;fsplk; nrd;W Nru;g;gjpYk; jkJ gzpia nrt;tNd nra;aNtz;Lk;.
xU [dehaf ehl;bd; %d;whtJ J}zhf fUjg;gLk; Clfq;fspd; kfj;jhd Nritapy;> Clfq;fSf;nfd;Wk; rpy flikfSk; nghWg;Gf;fSKz;L. ,e;jtifapy;> xU nra;jpia ngWtjpy; njhlq;fp mjid Clfj;jpy; mwpf;ifapl;L gpd; mJ ntapahd gpd;Dk; kPs;Ma;Tf;Fs; cl;gLj;jNtz;ba fl;lhak; Clfq;fSf;Fk; xt;nthU ClftpayhsDf;Fk; cz;L.
ahUk; mwpahj tplaj;ij ntspf;nfhzUk; Ntiyiaj; jhd; Clfq;fs; nra;JtUfpd;wd. ,t;thwhd Clfq;fs;> ngWfpd;w nra;jpfis rupahd tifapy; mwpf;fifaplg;gl Ntz;Lk;. mj;NjhL mit vf;fhuzq; nfhz;Lk; jpupTgLj;jg;glhkYk; mtw;Wf;fhf vLf;fg;gLk; Gifg;glq;fs;> Vida xyp kw;Wk; xspg;gjpTfs; vd;gd cz;ikahditahfTk; jdpg;gl;ltu;fspd; cupikfisr; Ruz;lhj tifapYk; mikjy; Ntz;Lk; vd;gJ xOf;f epajpahFk;.
Gpio jpUj;jq;fs; Vw;gLkplj;J kd;dpg;Gf; Nfhuntz;Lnkd;gJk;> xU Clfj;jhy; ntspapg;gl;l nra;jp jtwhdJ vd;fp;d;w gl;rj;jpy; Fwpj;j egUf;Nfh my;yJ mikg;Gf;Nfh gjpyspg;gjw;fhd re;ju;g;gk; toq;fg;glNtz;Lk;. ,ufrpakhd %yq;fs; vd;W ,dq;fhzg;gLfpd;w %yq;fis> Njitg;gLk;NghJ khj;jpuk; ntspg;gLj;j Ntz;Lk.; nghJkf;fspd; eyd;fisg; NgZfpd;w tplaq;fis ntspf;nfhzu;tNjhL mtu;fSf;F ghjfk; jUfpd;w tplaq;fisf; fz;L mtw;iw ,dq;fhl;b kf;fis tpopg;Gzu;Tf;F cl;glj;j Ntz;Lk; vd;gJk; Clfq;fSf;fhd nghJthd xOf;ftpjpahf nfhs;sg;gLfpd;wJ.
,g;gbahd xOf;ftpjpfisf; nfhz;bUf;Fk; ,yq;if Clfq;fs;> ,d;W ,j;jid tpjpfisAk; filg;gpbf;fpd;wdth vd;why;> ngUk;ghyhdtu;fsplkpUe;J nksdNk gjpyhfpwJ.
,g;NghJs;s Clfq;fs; jkf;Fupa xOf;ff; Nfhitapd; fPo; Rajzpf;ifNahL ele;Jnfhs;shky; gpwo;thd nra;jp mwpf;ifaply;fis ntspapl;Ls;s re;ju;g;gq;fs; gyTz;L. ,e;j tifapy; mt;thwhd re;ju;g;gq;fspd; rpy njhFg;Gf;fs;.
 
NjdpyTf;F ,uz;lhtJ fztNuhL ntspehl;bypUe;J te;j ngz; nfhs;Sg;gpl;b N`hl;lypy; nfhiy.
 
mz;ikapy; ntspehl;by; tho;e;Jtpl;L jdJ fztNuhL ,yq;ifapy; Njdpyitf; nfhz;lhLtjw;fhf te;J tpLjpnahd;wpy; jq;fpapUe;j ngz;nzhUtu; jq;fpapUe;j miwf;Fs; itj;Nj nfhiynra;ag;gl;bUe;jhu;. mtu; ahuhy; nfhiynra;ag;gl;lhu; vd;W ekJ Clfq;fs; gythwhf Nfs;tp vOg;gpdhYk; me;jr; nra;jpia mwpf;ifapl;l tpjk; gy Clfq;fspYk; jtwhdjhfNt fhzg;gl;lij mtjhdpf;fyhk;. vt;thW me;j nra;jp mwpf;ifaplg;gl;bUe;jJ vd;why;> Kjy; fztiu tpthfuj;Jr; nra;Jtpl;L jdj ,uz;lhtJ fztNuhL NjdpyT nfhz;lhLtjw;fhf ,yq;if te;Js;sjhfTk;> te;jtu; jdJ fztNuhL nfhOk;G nfhs;Sg;gpl;bapYs;s N`hl;ly; xd;wpy; jq;fpapUe;jNghJ nfhiy nra;ag;gl;bUe;jhu;.

சுதர்ஷனி சகிலா கனகசபை
(48) என்ற இப்பெண் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
இவர் ஏற்கனவே அங்கு திருமணமானவர் என்பதுடன்
2குழந்தைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. . எனினும் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவர் இங்கு வேறொரு நபரை மறுமணம் செய்துள்ளார். .

இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் அறையொன்றில் தங்கியுள்ளனர்
. இவர்கள் தங்கியிருந்த அறையானது கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் காணப்பட்டதால் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அறையைத் த றந்து பார்த்த போது குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்தமையைக் கண்டுள்ளனர். . கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்ட நிலையிலேயே சடலம் கிடந்துள்ளது.
உடனே அவ் ஊழியர்கள் கொள்ளுப்பிட்டிய பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்
. .
,t;thwhfj;jhd; ,yq;ifapd; gpugy jkpo; ehNsL xd;Wk; gy ,izar; jsq;fSk; njhlu;r;rpahf nra;jp ntspapl;L te;jik Fwpg;gplj;jf;fJ.
,r; nra;jpiag; nghWj;j kl;by; Fwpj;j ngz; nfhiy nra;ag;gl;l nra;jpia nrhy;y tUtjw;F Kd;> mg;ngz;zpd; me;juq;f tho;f;ifia glk;gpbj;Jf; fhl;lNt Clfq;fs; mjpf Mu;tk; nrYj;Jfpd;wd vd;gJ GydhfpwJ.
Fwpj;j nfhiy eltbf;if vd;gJ rl;lj;Jf;F KuzhdJ> ,J jz;lidf;F cl;gLj;jg;gl Ntz;ba Fw;wk; vd;gij kf;fSf;F njspTgLj;Jtij tpLj;J> nfhiy nra;ag;gl;l ngz; elj;ij jtwhdtunud;Wk; mtu; N`hl;lypy; me;epa MltUld; jq;fpapUe;jhu; vdTk; njhlu;gpy;yhj tifapy; mg;ngz;iz r%fj;jpw;F vjpuhdtuhff; fhl;LtJ Clf ju;kkhfhJ vd;gij ,q;Nf Clftpayhsu;fs; ftdj;jpy; nfhs;s Ntz;Lk; epfo;e;j cz;ikfis jkJ Ra tpUg;GntWg;Gf;F mg;ghy; epd;W eLepiyikNahL njuptpf;fpd;wtu;fs; jhd; Clftpayhsu;fs;. ,ijtpLj;J nra;jpfis jpupTgLj;jp mwpf;ifaply;fspd; ghu;itiaj; jpirjpUg;gp rKjhaj;jpy; khw;Wf; nfhs;iffis cUthf;fpd;w rpe;jidNahL ,g;NghJs;s Clfq;fs; nray; GuptJ GydhfpwJ.
nra;jpfis G+uzkhfTk; Rje;jpukhfTk; ntspapLk; cupik xt;nthU ClftpayhsDf;Fk; cz;L. MdhYk;> mwpf;ifaply;fis Gide;J ,y;yhjij ,Ug;gjhf khw;wpaikf;f vtUf;Fk; cupik fpilahJ. mJ ePjpAkhfhJ.

,NjNghd;W ,d;DnkhU nra;jp mwpf;ifapliy ,q;Nf Nehf;fyhk;.
gpugykhd ,izaj;jsj;jpy; ntspahFk; gj;jpupif xd;W rPuopAk; aho;g;ghz fyhr;rhuk; vDk; jiyg;gpy; fl;Liunahd;W ntspapl;bUe;jJ. me;jr; kjpg;gPl;Lf; fl;Liuapy; nrhy;yg;gl;l tplaq;fSk;> Rl;bf;fhl;lg;gl;bUe;j rPuopf;Fk; fhuzpfSk; rupahf fhzg;glhYk; rk;ke;jNk ,y;yhky;> vOjg;gl;bUf;Fk; mwpf;ifaplNyhL ve;jtifapYk; njhlu;gpy;yhj ghlrhiy khztpfspd; Gifg;glq;fisAk; rpy jkpo; Atjpfspd; Gifg;glq;fSk; ntspalg;gl;bUe;jd. ,g;gbahd Mf;fq;fSf;F fhu;l;Ld; Nghd;w glq;fis cgNahfpf;fyhNk? vjw;fhf rl;lj;jpw;F Kuzhd tifapy; ,g;gbahd Kaw;rp?
,J Kw;wpYk; Clf xOf;fj;jpw;F KuzhdJ vd;gJ mjid vOjpatu;fSf;Fk; mjid ntspapl;l Clf MrpupaUf;Fk; njupahkypy;iy. MdhYk;> ,t;thwhd nra;jpfis Ke;jpf;nfhz;L ntspf;nfhzu Ntz;Lk; vd;gjw;fhfNt ,j;jifa njhlu;G glhj Gifg;glq;fs; gad;gLj;jg;gl;Ls;sd. ,t;thW rk;ke;jNk ,y;yhky; ahUilaNjh glq;fs; gad;gLj;g;gLk;NghJ> mtu;fSila jdpg;gl;l tho;tpy; vt;thwhd gpur;rpidfs; vy;yhk; vOk; vd;gJ nrhy;ypj; njupaNtz;bajpy;iy.
,t;thW ,d;iwa Clfq;fspy; mjpakhdit ,t;thWjhd; jkJ nra;jp mwpf;ifapLjy;fis r%fj;jpw;F toq;fpf;nfhz;bUf;fpd;wd. Clq;fSf;nfd cUthf;fg;gl;l xOf;ff;Nfhit ,tu;fshy; fz;Lnfhs;sg;gLfpwjh vd;why;> ,y;iy vd;Wjhd; NtjidNahL $wNtz;bAs;sJ.
vdNt> eLepiyaha; ahUf;Fk; mbgzpahky; jdpj;Jtkhf Clfq;fs; jkJ Nritia kf;fSf;F toq;f Ntz;Lk;. khwhf Clfq;fNs kf;fis jtwhd ghijapy; topelj;Jk; Nghf;if kuw;w Ntz;Lk; vd;gjpy; midj;J jug;gpdUk; ftdkhf ele;Jnfhs;s Ntz;Lk;. cyfpd; %d;whtJ fz; vd tu;zpf;fg;gLk; Clfq;fs; ,dpNaDk; rupahd mwpf;ifaply;fis ntspapl Ntz;Lk; vd;gNj midtupdJk; vjpu;ghu;g;ghFk;.
                       ,uhkrhkp uNk\;- ,yq;if ,jopay; fy;Y}up

திங்கள், 2 ஏப்ரல், 2012

கல்லறைத் தோட்டங்களும் விளைகின்றன...


பொக்கிஷங்களாய்
நாம் பாதுகாத்திருந்த
எங்கள் உறவுகளின்
கல்லறைத் தோட்டங்களில்..
காய்கறிகளை நட்டு
வியாபாரம் செய்கிறார்கள்
எங்கிருந்தோ வந்த
சாத்தானின் உருவங்களை ஒத்த
இதயமில்லாதவர்கள்....
அவர்களுக்குத் தெரியவில்லை போலும்!!
எங்கள் நிலங்களில்
காய்கறிக்குப் பதிலாய்
எங்களவர்களின்...
முண்டங்களும் எலும்புக் கூடுகளுமே
விளையுமென்று....!!

இராமசாமி ரமேஷ்
அளம்பில்.