மரபுக்கவிதை,புதுக்கவிதை என்னும் இரு நிலைகளைத்தாண்டி மூன்றாவதாக மாதிரிக்கவிதைகள் எனும் பாணியை இலக்கிய உலகில் அறிமுகம் செய்துள்ளார் நெடுந்தீவு முகிலன். "கடவுளின் சயனத்தைக் கலைக்கும் மணியோசை" இது மாதிரிக்கவிதைகளின் ஆரம்பம் கிடையாது. மாதிரிகளின் ஏழாவது சகோதரன்.
இந்தச் சமூகத்தின் நித்திரையைக் கலைத்து, அவர்கள் யோசிக்கக்கூடிய இடியோசைகள் போல "கடவுளின் சயனத்தைக் கலைக்கும் மணியோசை" அமைந்திருப்பதாக வாழ்த்துக்கூறியிருக்கிறார் நமது மூத்தபடைப்பாளி மேமன்கவி அவர்கள்.
நெடுந்தீவு முகிலனின் கவிதைத்தொகுதிகள் வரிசையில் ஏழாவதாக "கடவுளின் சயனத்தைக் கலைக்கும் மணியோசை" புதுப்பொலிவோடு, ஏக்கங்களைச் சுமந்துகொண்டு தன்வாழ்வு விடியாதா என, முட்கம்பிகளுக்கு நடுவில் காத்திருக்கும் சிறுவனை அட்டைப்படமாகத் தாங்கி வெளிவந்திருக்கிறது.உண்மையிலேயே தற்காலத் தமிழ்மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற விதமாக அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளமையை பெரிதும் வரவேற்று முகிலனுக்கு நன்றிசொல்ல வேண்டும்.
இந்நூலுக்கான தலைப்பு, உள்ளடங்கியுள்ள கவிதைகளோடு நன்றாகப் பொருந்துகின்றது. நமது சமுதாயத்தில் சிதறிக்கிடக்கின்ற பிரச்சினைகளை கண்டெடுத்து அவற்றை தனது வார்த்தைக் கோர்வைகளினால் வார்த்தெடுத்து நமக்காக மாதிரிக்கவிதைகள் என்ற படைப்பாக தந்துள்ளார் முகிலன். நேர்த்தியாகவும், கருத்துப் புலப்படும் வகையிலும், தனது கவிதைகள் சொல்லவரும் விடயங்களைப் பேசும் படங்களாகவுமம் இந்நூலிலே ஓவியங்களை இணைத்துள்ளார். இதுவும் நுர்லின் சிறப்புக்குச் சான்றான ஒரு காரணியாகும்.
வறுமை, போரினால் ஏற்பட்ட இழப்பு, பெண்ணியம், சாதிப்பிரிவினை,ஊனம், மனித அவலங்கள் இப்படியாக பலதரப்பட்ட சிக்கல்களை இந்தநூல் தாங்கிநிற்கிறது. தற்போதைய இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப்படாது தவறவிடப்பட்ட பிரச்சினைகளைக் கண்டுபிடித்து கவிவடித்துள்ளார் ஆசிரியர்.
இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இணையங்களிலும் தனது கைவண்ணங்களைப் படைத்துவரும் நெடுந்தீவு முகிலன், மென்மேலும் தரமான பல படைப்புக்களை இலக்கிய மண்ணுக்கு வழங்வேண்டும் என வாழ்த்துகிறேன்.
"கடவுளின் சயனத்தை மட்டுமல்ல! கடவுளையே பாகுபடுத்திய மனிதர்களின் சயனத்தையும் சேர்த்தே கலைத்து சிந்திக்கவைக்கிறது இந்த மாதிரிக்கவியோசை"
இராமசாமி ரமேஷ்.
நெடுந்தீவு முகிலனின் கவிதைத்தொகுதிகள் வரிசையில் ஏழாவதாக "கடவுளின் சயனத்தைக் கலைக்கும் மணியோசை" புதுப்பொலிவோடு, ஏக்கங்களைச் சுமந்துகொண்டு தன்வாழ்வு விடியாதா என, முட்கம்பிகளுக்கு நடுவில் காத்திருக்கும் சிறுவனை அட்டைப்படமாகத் தாங்கி வெளிவந்திருக்கிறது.உண்மையிலேயே தற்காலத் தமிழ்மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற விதமாக அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளமையை பெரிதும் வரவேற்று முகிலனுக்கு நன்றிசொல்ல வேண்டும்.
இந்நூலுக்கான தலைப்பு, உள்ளடங்கியுள்ள கவிதைகளோடு நன்றாகப் பொருந்துகின்றது. நமது சமுதாயத்தில் சிதறிக்கிடக்கின்ற பிரச்சினைகளை கண்டெடுத்து அவற்றை தனது வார்த்தைக் கோர்வைகளினால் வார்த்தெடுத்து நமக்காக மாதிரிக்கவிதைகள் என்ற படைப்பாக தந்துள்ளார் முகிலன். நேர்த்தியாகவும், கருத்துப் புலப்படும் வகையிலும், தனது கவிதைகள் சொல்லவரும் விடயங்களைப் பேசும் படங்களாகவுமம் இந்நூலிலே ஓவியங்களை இணைத்துள்ளார். இதுவும் நுர்லின் சிறப்புக்குச் சான்றான ஒரு காரணியாகும்.
வறுமை, போரினால் ஏற்பட்ட இழப்பு, பெண்ணியம், சாதிப்பிரிவினை,ஊனம், மனித அவலங்கள் இப்படியாக பலதரப்பட்ட சிக்கல்களை இந்தநூல் தாங்கிநிற்கிறது. தற்போதைய இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப்படாது தவறவிடப்பட்ட பிரச்சினைகளைக் கண்டுபிடித்து கவிவடித்துள்ளார் ஆசிரியர்.
இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இணையங்களிலும் தனது கைவண்ணங்களைப் படைத்துவரும் நெடுந்தீவு முகிலன், மென்மேலும் தரமான பல படைப்புக்களை இலக்கிய மண்ணுக்கு வழங்வேண்டும் என வாழ்த்துகிறேன்.
"கடவுளின் சயனத்தை மட்டுமல்ல! கடவுளையே பாகுபடுத்திய மனிதர்களின் சயனத்தையும் சேர்த்தே கலைத்து சிந்திக்கவைக்கிறது இந்த மாதிரிக்கவியோசை"
இராமசாமி ரமேஷ்.
வருகை தாருங்கள்...!
பதிலளிநீக்குவாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
நன்றிகள் உரித்தாகட்டும்.
பதிலளிநீக்கு