ஊமையான என் உயிர் வலிகள்
..........................................................................
உன் ஒற்றைவரி வார்த்தைக்காய்
என் மனம்
மௌனவிரதமிருப்பதை அறிவாயோ?
உன் நேசமான பார்வைக்காய்
என்விழிகள்
பாசத்தோடு பார்த்திருப்பது புரிகிறதா?
உன் உறவுக்காய்
என் உள்ளமும் உயிரும்
பூத்திருப்பதை உணர்கிறாயோ?
என் மௌனமான தவிப்புக்கள்
உன் மனதுக்கு புரியாது தான்...!!
பேசும் காதலே தோற்றுப் போகையில்
ஊமையான என் உயிர் வலிகள்
உனக்கு புரிவது சந்தேகம் தான்......
இராமசாமி ரமேஷ்,

ஊமைக்காதலின் குரலைப் பதிவு செய்த கவிதை அருமை!!
பதிலளிநீக்கு