மரணத்தை
ஏற்றுக்கொள்ளத்தான்
என் இதயத்துக்கு
இப்போதெல்லாம் ரொம்பப் பிடிக்கிறது...
வாழ்தலில்
நான் பட்ட வலிகளின்
ரணங்களால்
உலகத்தை வெறுத்து
உறவுகளை ஒறுத்து
தனிமையில் எங்கோ
என் பயணத்தை நகர்த்திவிட
எண்ணிப் பார்த்தாலும்
சில கடமைகள்
காத்திருப்பது கண்டு
நிறுத்திக் கொள்கிறேன்
நகர்வின் தொடர்ச்சியை...
இருப்பினும் ...
இன்னும் ஒரு பொழுதில்
மீண்டும் நகரலாம் என் பாதங்கள்
இந்த மனிதமற்ற
உலகை விட்டு.....
------------------------------------------------------------------
அளம்பில்
இராமசாமி ரமேஷ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக