வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

மரணம் சுமந்தவர்கள் நாங்கள்....

 எங்கள் தேசம்
சுற்றுலாத் தளம் தான்
உங்களுக்கு......
எங்களின் உறவுகள்
பட்டினி கிடந்து துடிதுடித்து
மாண்டு போனதும்
அங்கங்களை இழந்து
ஊனத்தோடு  உழல்வதும்
சொந்த மண்ணில்
அகதிகளாய் அலைவதும்
உங்களுக்கு
விருந்தாகும் விடயங்கள் தான்
ஏனெனில்.....
மரணத்தை மனக் கண்ணில்
காண்பவர்கள் நீங்கள் ...
நாங்களோ ......
நாளாந்தம் மரணத்தை சுமந்தவர்கள்,,,,,,,,,,




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக