வறுமை வாழ்க்கை அத்தியாயங்களை
அவசரமாய் தின்று முடித்துவிட
வாலிபர்களின் வரதட்சனைப் போரிலே
தலை நிமிர்ந்து
தாக்குப் பிடிக்க முடியாமல்
தன் இளமையை
காலப் பேய்க்கு காணிக்கையாக்கிவிட்டு
மனசு முழுக்க
வேதனைக் கீறல்களின் வலியோடும்
விழிகளில் எல்லாம்
அஸ்த்தமனமாகிப் போன
மாங்கல்யக் கனவின் தவிப்போடும்
தனக்கான குங்குமத்தை
தரப்போகும் இதயமுள்ளவனை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்
இங்கும் ஒரு முதிர்கன்னி.....
நடவாது என்று தெரிந்த பின்பும்...!!!
இராமசாமி ரமேஷ்
அளம்பில்
அவசரமாய் தின்று முடித்துவிட
வாலிபர்களின் வரதட்சனைப் போரிலே
தலை நிமிர்ந்து
தாக்குப் பிடிக்க முடியாமல்
தன் இளமையை
காலப் பேய்க்கு காணிக்கையாக்கிவிட்டு
மனசு முழுக்க
வேதனைக் கீறல்களின் வலியோடும்
விழிகளில் எல்லாம்
அஸ்த்தமனமாகிப் போன
மாங்கல்யக் கனவின் தவிப்போடும்
தனக்கான குங்குமத்தை
தரப்போகும் இதயமுள்ளவனை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்
இங்கும் ஒரு முதிர்கன்னி.....
நடவாது என்று தெரிந்த பின்பும்...!!!
இராமசாமி ரமேஷ்
அளம்பில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக