இப்போது உலக அரங்கிலே அனைத்து தரப்பினராலும் மிகவும் எதிர்பார்ப்போடும் அதேசமயம், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட...்டுக்கொண்டிருக்கின்ற விடயமாக மாறியிருக்கிறது ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர். இக்கூட்டத்தொடரில் ஜக்கியநாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்ற நாடுகள் அனைத்தும் கலந்துகொள்கின்ற போதும், மிகவும் முக்கியமாக அவதானிக்கப்படுகின்றன இரு நாடுகள்.ஒன்று இலங்கை, மற்றையது வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா. இரண்டுநாடுகளும் கூட்டத்தொடர் ஆரம்பித்த காலகட்டத்த்தில் பனிப்போர் நடத்தின. இப்போடு தமது ஊடகங்களை வைத்துக்கொண்டு பாரிய, பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை இருநாடுகளும் மாறிமாறி அள்ளிவீசி வருகின்றன.
அமெரிக்கா இப்படி தம்மீது பாரிய பிரச்சினையை கட்டவிழ்த்துவிடும் என இலங்கை ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாக, இலங்கை அரசின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் நிறைவடைந்தது மட்டுமல்லாமல் ஒரு இக்கட்டான சூழலையும் தோற்றுவித்து நிற்கின்றது. அமெரிக்க அரசும் இலங்கை அரசை கவிழ்த்துவிட சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. ஜநாவும் அதற்கான சந்தர்ப்பத்தை மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் எனும் பெயரில் வழங்கியுள்ளது. இலங்கை அரசு எண்ணியே பார்த்திராத பிரச்சினைகளையெல்லாம் வெளிக்கொண்டுவர அமெரிக்கா பலமான ஆதாரங்களோடு முதற்கட்டமான தமது 'இலங்கை அரசின் மனிதஉரிமை மீறல்கள்” தொடர்பான அறிக்கையை ஜநாவுக்கு கையளித்திருந்தத அனைவரும் அறிந்திருந்த விடயம். இலங்கை அரசாங்கமும் பதிலுக்கு, தமது கீர்த்திக்கு அவதூறு விளைவிக்கவே அமெரிக்க அரசு முனைவதாக தங்களட காரசாரமான அறிக்கைகளை நாளாந்தம் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தாம் ஒருபோதும்
மனிதஉரிமை மீறல்களை எச்சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளவில்லையென இலங்கை தம்பக்க நியாயங்களைக் கூறி அயல்நாடுகளிடம் தமக்கு ஆதரவு தரும்படி கேட்டுநிற்கின்றது. வன்னிமக்களுக்கும், ஏனைய தமிழ்பேசும் சமுதாயத்தினருக்கும் இலங்கை அரசு நிகழ்த்தியிருந்த மனிதஉரிமை மீறல்களை அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் எனும் புலனாய்வு ஊடகம் அப்பட்டமாக வெளிக்கொண்டுவந்துகொண்டிப்பதும் தற்போது இலங்கை அரசுக்கு பெரிய பேரிடி. அதனையும் வஞ்சுமளவுக்கு பல நாடுகளையத் இலங்கைக்கெதிராக திருப்பிவிடும் பிரச்சினையாக இந்த அமெரிக்க அரசின் செயற்பாடு அமைந்திருக்கிறது.
இந்தவகையில், இலங்கையின் உறவினைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக மௌனம் சாதித்துவந்த நாடுகளும் இன்று போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டன. இத்தகைய மனிதஉரிமை மீறலை தாமும் எதிர்ப்பதாக தங்களத ஆதரவை அமெரிக்காவின் பக்கம் திருப்பிவிட்டதும், இலங்கை கையைப் பிசைந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகிவிட்டது. ஆதரவுக்கு ஜோர்தான் போன்ற அரபுநாடுகள்தான் சில அடைக்கலம் கொடுத்துள்ள இந்நிலையில், அவைகளும் அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள முடியாத தருணத்தில் கழன்றுவிடக் கூடிய சாத்தியங்களும் நிறையவே உள்ளன. ஆகமொத்தத்தில், இலங்கை அரசு அமெரிக்கா மற்றும் ஏனைய உலகநாடுகளின் கேள்விகளுக்கும் கண்டிப்பாய் பதிலளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிpருக்கிறது. எனவே, இப்போது அமெரிக்க அரசின் மனிதஉரிமை மீறல்களும் அதன் செயற்பாடகள் தொடர்பான கிளறல்களும் இப்பொது இலங்கை அரசினால் தோண்டப்படும் நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் நீதியும் நியாயமும் சரியாக தீர்ப்புக்குள் உள்வாங்கப்பட்டு விட கிடைக்கிறதா என்று! .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக