வெள்ளி, 30 மார்ச், 2012

கவிதை மாதிரி...

கற்றுக் கொடுங்கள்
பூக்களே...
மனிதருக்கும் புன்னகையை!!

கூட்டத்தில்
மனிதநேயம் காப்போம்
என்றுவிட்டு
வீட்டில்
மாட்டிறைச்சிக்கறி விருந்து...

காத்திருக்கிறேன்!!
எனக்கும்
காதல் வருமென்றல்ல..
காணாமல் போன
கணவர் வருவாரென்று...

கட்டாயப்படுத்தி
கையளிக்கப் படுகின்றன
விதவை எனக்கு
வித விதமான பட்டங்கள்..

தேடிக் களைத்துவிட்டேன்
தேநீர் ஊற்றிய அம்மாவை....
கை மட்டும் இருக்கிறது
ஏனையவை......?

நீதிமன்றங்கள் நிறைகின்றன
விவாகரத்துக்கள்
வீதிவரை நிற்பதால்...

அக்கா
அரைப் பவுன் செயினாம்
அண்ணா
அவசரமாய் பைக்காம்
அம்மா மட்டும்
அன்பு மட்டும் போதுமாம்!!

நானும் வசதியானவன்
கண்ணீரும்
கனவுகளும்
என்னிடம் ஏராளமுள்ளன...
--------------------------------------------------
அளம்பில்
இராமசாமி ரமேஷ் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக