இந்த வேலை வேண்டாமென்று
வந்ததையும் விட்டுவிட்டு
தகுதியான வேலைதேடி
தலைநகரம் ஓடிவந்தேன்...
...
இங்குவந்து பார்த்த பின்தான்
இதயம் நொந்து போகிறது
தகுதியான வேலைசெய்தே
கைகள் வெந்து நோகிறது...
அம்மா
தனது தோடு விற்று
தந்த பணமும் கரைந்து போச்சு
அக்கா வளையல் விற்று வாங்கி
தந்த உடைகள் கிழிஞ்சு போச்சு...
தலைநகரச் சம்பளத்தில்
தலைகுனியும் நிலை அதிகம்
கண்ணீர் சிந்தி கதறுகின்ற
போலி வாழ்வே மிக அதிகம்...
உறவுகளைப் பிரிந்து வந்து
உணவு தேநீர் தியாகம் செய்து
எத்தனையோ இடர்களோடு
இந்த வாழ்க்கை தேவைதானோ...?
வந்த வேலையைச் செய்துகொண்டு
சொந்த ஊரில் வாழ்தல் நன்று
இங்கே கிடந்து தவிப்பதினால்
மனத்துணரே மீதமுண்டு...!!
இராமசாமி ரமேஷ்-
வந்ததையும் விட்டுவிட்டு
தகுதியான வேலைதேடி
தலைநகரம் ஓடிவந்தேன்...
...
இங்குவந்து பார்த்த பின்தான்
இதயம் நொந்து போகிறது
தகுதியான வேலைசெய்தே
கைகள் வெந்து நோகிறது...
அம்மா
தனது தோடு விற்று
தந்த பணமும் கரைந்து போச்சு
அக்கா வளையல் விற்று வாங்கி
தந்த உடைகள் கிழிஞ்சு போச்சு...
தலைநகரச் சம்பளத்தில்
தலைகுனியும் நிலை அதிகம்
கண்ணீர் சிந்தி கதறுகின்ற
போலி வாழ்வே மிக அதிகம்...
உறவுகளைப் பிரிந்து வந்து
உணவு தேநீர் தியாகம் செய்து
எத்தனையோ இடர்களோடு
இந்த வாழ்க்கை தேவைதானோ...?
வந்த வேலையைச் செய்துகொண்டு
சொந்த ஊரில் வாழ்தல் நன்று
இங்கே கிடந்து தவிப்பதினால்
மனத்துணரே மீதமுண்டு...!!
இராமசாமி ரமேஷ்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக