சிலாபம், கருக்குப்பனை போன்ற பிரதேசங்களில் இருந்து தொழில் செய்வதற்காக வந்து தங்கியிருந்த மக்களின் வாடி வீடுகளே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளன. ஒரு வாடியில் பற்றிக் கொண்ட தீயினாலே ஏனைய வாடிகளும் எரிந்துள்ளதோடு, ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மேலான பெறுமதியுள்ள தொழில் உபகரணங்களும் அவர்களுடைய உடமைகளும் அழிந்துள்ளன. அத்தோடு, இவர்களில் பாதிக்கப்பட்ட பதினோரு வாடிகளைச் சேர்ந்த ஐம்பத்து நான்கு பேருக்கும் உடனடியாக உணவுப் பொருட்கள், சமையல் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லை மாவட்ட நிறைவேற்றுப் பொறுப்பதிகாரி எஸ்.சதீஸ்வரன் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக