புதன், 2 மே, 2012

அந்த வசந்தகாலம் வருமோ?

நகரத்துக்குள்
வாக்கப்பட்டுப் வந்தாலும் 
சொந்த மண்ணில் அம்மாவின் மடி...
அக்காக்களின் அன்பு கலந்த சண்டை.. 
அப்பாவின் கோபமில்லா திட்டல்கள்..
கிராமத்தில் குடும்பமாய் 
கூடவரும்  நண்பர்கள்....
காலாற நடக்கும் கடற்கரை....
ஓடித் திரிந்த ஊரின் எல்லைகள்...
பாசத்தையே பரிமாறும் ஊரவர்கள்...
பட்டாம்பூச்சிகளாய் பறந்த
பள்ளிக்கூடம்....
மாலையில் மனம் வருடும் 
சந்தியில் கூடும் சந்திப்புக்கள்....
நண்பன் மடியில் படுத்தபடி
கூத்துக்கள் பார்க்கும் நாட்கள்...
தோழிகளோடு சண்டையிடும் 
பிரத்தியோக வகுப்புக்கள்..
சொர்க்கமே போனாலும்
ஊர்வந்து அம்மாவிடம் 
ஒருபிடி அமுதுண்ணத் தூண்டும் ஏக்கம்...
இப்படியிப்படி 
எல்லாமே இழந்து இங்கே
இயந்திரத் தன வாழ்வில் 
இன்பங்கள் தொலைத்து 
இல்லாததைத் தேடியவர்களாய்
நகர்கிறது வாழ்வு-எப்போதாவது 
கிராமம் போவேன் என்னும் கனவோடு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக