புதன், 23 மே, 2012

காலம் மாறிப் போச்சு-



 
சிறுகதை- 

................................................................................
தம்மைச் சுமந்து வந்து நின்ற ஒட்டோவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எதிரே தெரிந்த வாயிற்கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்கள் அவர்கள் இருவரும்.
“மம்மி! யாரோ வர்றாங்க...” குழந்தை நிதாஷின் அழைப்பைக் கேட்டுஇ வெளியே வந்தாள் மேனகா. எதிரே வந்தவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்தது. “வாங்க மாமா! மாமி வாங்க... “அவர்களின் கைகளிலே தொங்கிக் கொண்டிருந்த பைகளை வாங்கிக் கொண்டேஇ உள்ளே அழைத்துப் போய் இருக்க வைத்தாள். யார் இவர்களெனஇ இரு வழிகளினாலும் நோட்டமிட்டபடி நின்ற குழந்தையிடம் நிதாக்குட்டி! இவங்க யாரு தெரியுமா? இது உன்னோட அப்பம்மா. இவங்க உன்னோட அப்பப்பா. போய் பேசு... “ என்ற மேனகாவையும் பெரியவர்களையும் மாறிமாறிப் பார்த்தது குழந்தை.
“பார்த்தியாம்மா... குழந்தைக்கு எங்களை யார்னு கூடத் தெரியலை. இதுதான்... குடும்பத்தோட ஊருக்கு வாடா வாடான்னா... உன் புருஷன் வரமாட்டான். இப்ப பாரு! குழந்தை முழிக்கிறா...” சலித்துக் கொண்டார் இராமலிங்கம். ‘மாமா... எனக்கும் ஆசைதான். எத்தனையோ தடவை கேட்டேன் அவர்கிட்ட. வேலை அதிகமா இருக்கிறதால வர லீவு கிடைக்கிறதில்லை மாமா. சரி சரி! இதோ... குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்... பேசிக் கொண்டிருங்க” அவள் உள்ளே போனாள்.
தம் மகனின் குழந்தையைஇ கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த மகேஸ்வரி “வாடா செல்லம்! அப்பம்மா கிட்டே வா... இங்க பாரு! பிள்ளைக்கு... என்ன கொண்டு வந்திருக்கிறேன் என்று” பையினுள் இருந்த கறுத்துதக் கொழும்பான் மாம்பழங்களை நீட்டியபடி பிள்ளையை அணைக்க எத்தணித்தாள். குழந்தை அசையாமல் அப்படியே நின்றது.
“நிதாக்குட்டி... அப்பம்மா கிட்டே போம்மா. அங்க பாரு. பெரிய மாம்பழம். நம்ம வீட்ல புடிங்கனது... “அவரும் சேர்ந்து அழைத்த போதுஇ மேனகாவும் இரு குவளைகளில் பழரசத்தோடு வந்தாள். “நிதாம்மா! அப்பம்மாட்ட போங்கடா. ம்.... பயப்பிடக் கூடாது. இவங்க புள்ளையோட சொந்தக்காரங்கதான்...” தாயின் பேச்சோடுதான்இ இருவரிடமும் வந்து ஒட்டிக் கொண்டாள் குழந்தை.
சேர்ந்து கொண்ட குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டார்கள் இருவரும். ஒன்றரை வருடங்களின் பின்பு தானே வந்திருக்கிறார்கள். அந்த அத்தனை நாள் கனவுகளையும்இ நிஜமாய் தரிஷித்த போது மனங்களிலே நிறைவே சூழ்ந்திருந்தது. மகேஷ்வரி தன்னோடே குழந்தையை வைத்துக் கொண்டாள். அவர் தன்னிடம் தரும்படி அடம்பிடித்தார். இருவரினதும் உண்மையான நேசிப்பை உணர்ந்தவளாய்இ குழந்தை அவர்களோடு ஒன்றித்துப் போனது. பலனை எதிர்பார்த்து போலியான பாசம் வைக்கும் இந்தக் காலத்தில்இ இத்தனை அன்பு வைத்திருக்கிறார்களே... என நினைக்கும் போதேஇ மேனகாவின் உள்ளம் சந்தோஷித்தது.
ஊர்ப் புதினங்களையும் பயண அனுபவங்களையும் பரஸ்பரம் தம் மருமகளோடு பறிமாறிக் கொண்டார்கள். மேனகாவும் இங்கே நடக்கின்ற சம்பவங்களையும் விஷேடங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
“ஏம்மா மேனகா! இங்க உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையா?” ஏதேனும் இடர்பாடுகள் இருக்குமோ எனஇ மருமகளிடம் கேட்டார். “ச்சேச்சே! ஒரு கஷ்டமும் இல்லை மாமா. ஏன் மாமா? நீங்க வரப்போறதை போன்பண்ணி சொல்லி விட்டு வந்திருக்கலாமே! ஏற்கனவே தெரிஞ்சிருந்தா... அவரும் இன்னைக்கு லீவு போட்டிருப்பார்”
“அதனால என்னம்மா. நாளைக்கும் லீவு போடலாம் தானே! பரவாயில்லை. குழந்தை இப்போ ரொம்பவே பேசுறாளே...” மனைவியின் மடியிலிருந்த நிதாவின் கன்னங்களைத் தட்டியவாறேஇ சொன்னார் இராசலிங்கம்.
“மாமி! நீங்க குளிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க. நான் சாப்பாடு தயார் பண்றேன். மாமா சுடுதண்ணி வெக்கட்டுமா?” கரிசனையோடு கேட்ட மருமகளிடம் “சுடுதண்ணி வேண்டாம்மா. இந்தத் தண்ணியே போதும். என்னங்க! நீங்க போய் குளிங்க. நான் மருமகளுக்கு... ஏதாவது உதவி பண்றேன்” என்ற மகேஷ்வரியை கையமர்த்தினாள் மேனகா. “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் மாமி. நானே பண்ணிக்குவேன். நீங்க குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க...”
அவள் சமையலறைக்குள் நுழைந்து கொள்ளஇ இவர்கள் குழந்தையோடுஇ ஐக்கிய மானார்கள்.
யாழ்ப்பாணத்திலேஇ ஒரு சாதாரண குடும்பம்தான் இராசலிங்கத்தினுடைய குடும்பம். தபால் நிலையத்தில் பியூனாகவே வேலை செய்தார். அதிகரித்துக் கிடக்கும் விலைவாசியில்இ வருகின்ற வருமானம் வாழ்க்கைச் செலவை சமாளிக்க போதுமானதாக இல்லாவிட்டாலும்இ ஏதோ பிரயத்தனப்பட்டு செலவை இயன்றவரையில் குறைத்துக் கொண்டார்கள்.
யாழில் கண்டதெல்லாம் காசு தானே! கண்ணியமாக வாழ்ந்தார்கள். இவ்வாழ்வின் பயனாக மகன் மதனைஇ படிக்க வைத்து அரச உத்தியோகம் பார்க்க வைக்க வேண்டுமென்பது தான் பெற்றவர்களின் கனவு. வருகின்ற ஊதியத்தில் வீட்டுத் தேவைகளைக் குறைத்துக் கொண்டுஇ மகனின் கல்விக்காக செலவு செய்தார்கள். எந்தவித கஷ்டத்தையும் அவன் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகஇ தாங்களே சுமைதாங்கிகளா னார்கள். உயர்தரம் முடித்து சிறந்த பெறுபேற்றோடு புலமைப் பரிசிலின் உதவியோடுஇ பல்கலைக்கழகம் புகுந்தான் மதன். காலம்இ காற்றிலே சிக்குண்ட கடதாசியாய் காணாமல் போய்க் கொண்டிருந்தது.
பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு விரிவுரையாளனாக வெளியே வந்தான். கூடவே காதல். மகனின் விருப்பமே தம் விருப்பமெனஇ திருமணத்தையும் செய்து வைத்தார் இராசலிங்கம். தனது தகுதிக்கு அங்கே வேலை செய்ய முடியாதெனவும்இ கொழும்புக்குப் போக வேண்டுமெனவும் பெற்றவர்களிடம் கூறஇ தமது உழைப்பில் எதிர்காலம் கருதி சேமிப்பில் வைத்திருந்த பணத்தைக் கொடுத்து கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள். அடிக்கடி வந்து பார்த்துப் போனார்கள் பெற்றவர்கள். இவன் வேலையை காரணங் காட்டி தவிர்த்து விடுவான்.
இராசலிங்கத்தின் வயதும் அதிகரிக்கஇ வேலையும் விடைகொடுத்து ஓய்வூதியம் தரப்பட்டது. அது அவர்கள் இருவரினதும் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாத போதும்இ தம் மகனிடம் கேட்பதில்லை. வாழ வேண்டிய இளசுகளை கஷ்டப்படுத்தக் கூடாதென இருந்து விட்டார்கள். மதன் எப்போதாவது அத்தி பூப்பதுபோல் சில ரூபாய்களை அனுப்பி வைப்பான்.
இப்படித் தான்இ இந்த இருவரினதும் பயணம் நகர்ந்த கொண்டிருக்கிறது. மகனைப் பார்க்க மனசு தவிக்கும் போதுஇ ஏதாவது செய்து கொழும்புக்கு வந்து விடுவார்கள். இந்தத் தடவையும் அப்படித்தான்.
மாலை....
அலுவலகத்திலிருந்து வந்தான் மதன். ‘என்னங்க. மாமாவும் மாமியும் வந்திருக்காங்க” “ஆ! அப்பிடியா..” அவனிடமிருந்து வந்த வார்த்தைகள் மேனகாவை கோபம் கொள்ள வைத்தது தான். ஆனால்இ அவளால் வேறெதுவுமே செய்ய முடியாதே! மெளனமாகிப் போனாள்.
மகனைக் கண்ட சந்தோசத்தில்இ அவனை கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள் அந்த பேதைத் தாய். கோட்டும் சூட்டும் கையிலே பைல்களுமாய் வந்து நின்ற மகனை ஒரு பெருமிதத்தோடு நோக்கினார் இராசலிங்கம். தன் கஷ்டங்களின் பயனாக மகன் இப்படி வாழ்வது அவருக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவன் குளித்து முடித்த வந்துஇ அனைவருக்குமாய் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதுஇ இந்தக் காலம் இப்படியே தொடர்ந்தும் வராதா? எனஇ பெற்ற இருவரும் ஏக்கமாக பார்த்தார்கள். கடைசிக் காலத்தை மகனோடும்இ அவன் மனைவி பிள்ளைகளோடும் கழிக்க வேண்டும் என்று இருவருக்குள்ளும் வாஞ்சையிருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. மகனாக விரும்பினால் இருக்கலாம். மற்றப்படி நாமாகக் கேட்டுக் கொண்டுஇ இருப்பது சரியல்ல என்பதுதான் இருவரினதும் எண்ணம். அவர்களது எண்ணம் நியாயமானதே!
அன்றைய பொழுது சந்தோஷமாக நகரஇ இரவு குழந்தை நிதா பெரியவர்களோடு தான் உறங்கப் போகிறேன் என அடம்பிடித்தான். சரியென அவர்களோடே விட்டுவிட்டு வந்தாள் மேனகா. அன்றைய நாள்இ மிகவும் அழகான நாளாக அவளுக்குத் தோன்றிற்று. கலகலப்பாய் கடந்த நொடிகள் எப்படி புதிதாய் இன்று மட்டும்? பெரியவர்களின் வருகையே இதற்குக் காரணம் என்பது புரிந்தது. என்னதான் அத்தனை ஆடம்பரங்களோடும் வாழ்ந்தாலும்இ மனதில் ஒரு நிம்மதி ஒரு நிறைவு என்பதுஇ அன்பு பாசம் நம்மை நெருங்கும் போதுதான் ஏற்படும் என்பது அவனுக்கு தெளிவாயிற்று. ஏதோ குறிப்புக்காக எழுதிக் கொண்டிருந்தவனிடம் “என்னங்க... என் னங்க...” என்றாள். “ம்... சொல்லு...” “மாமாவையும் மாமியையும் இங்கேயே வெச்சுக் கொண்டால் என்னங்க” மெதுவாக அவனிடம் கேட்டாள். “ஏன்... இப்போ திடீரென்று இந்தக் கேள்வி...” எழுதுவதை நிறுத்தாமலே கேட்டான் மதன்.
“இல்லைங்க. அவங்களுக்கு வயசும் போயிடிச்சு. தனியாத் தானே அங்க இருக்காங்க. நம்மளோடே வெச்சக் கொள்வோமே! நாம கூட இங்க தனியேதானே இருக்கோம். வயசான காலத்தில்... ஆறுதலா இருப்பாங்களே! “தன் விருப்பத்தை முழுமையாக சொல்லி முடித்த போதுஇ அவன் எரிந்து விழுந்தான்.
“இப்போ இங்கே இருக்கிற விலைவாசில... ரெண்டு பேரை வச்சிருக்கிறது சும்மா வேலையா? அதுக்கொன்று நான் தனியே உழைக்க வேணும். ஒண்ணும் வேணாம். அவங்க அங்கயே இருக்கட்டும். 
மாசம் மாசம் பணம் வேணும்னா.. கொஞ்சம் அனுப்பி வெப்போம்..” அவன் பேசியது இவளுக்கு அருவ ருப்பை ஏற்படுத்தியது. “பெத்தவங்களைக் கூட.. பாரமா நெனங்குறாங்களே” கணவனின் பேச்சை மீறி அவளால் எதுவும் செய்யமுடியாதென்பதால்இ பேசாமல் படுத்துக் கொண்டாள்.
இதுவரை இவர்கள் இருவரும் பேசிக் கொண்டது. தூங்கிப் போன குழந்தையை கொடுக்க வந்து நின்ற மகேஷ்வரியின் காதுகளில் வீழ்ந்தது. ஊசி குத்தப்பட்ட பலூனாய்இ இதுவரை பூரித்துப் போயிக் கிடந்த மனது சுருங்கிப் போனது. வழிகின்ற கண்ணீரோடு கணவரிடம் போய் நடந்ததை விபரித்தாள். அழுகை மட்டுமே அவளுக்கு வந்தது. பேச்சு தடுமாறியது. “இங்க பாரும்மா மகேசு. இந்தக் கால பிள்ளைங்க பாசத்தை தேடுகிறதில்லை. பணம் தான் பெரிசு அவங்களுக்கு! நம்ம பையன் மட்டும் விதிவிலக்காயிருப்பானா... சொல்லு! வந்தோமாஇ பார்த்தோமா.. உடனே போய்டனும்.. நாமஇ நாளைக்கு விடிய ஊருக்கு போவோம்... சரியா?” விம்மிக் கொண்டிருந்த மனைவியைஇ தன் மார்போடு சேர்த்துக் கொண்டார் இராசலிங்கம்.
…………………………………………………………………………………………………
                       இராமசாமி ரமேஷ்
                           அளம்பில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக